மழை: மனதுக்குள்ளும்
உன் கருவிழிகளில் குளிர்ந்துகிடக்கிறது
என் பால்வீதி
மழையின் திவலைகளில் முறுவலிக்கிறது
உன் முகம்
ஈரக்காற்றில் உரத்துக் கேட்கிறது
மாயாவியின் பாடல்
வீணாகிக் கொண்டிருக்கிறது
நனைதல்
வெகுதூரத்திற்கு வெகுதூரம்
மஞ்சள் பூத்துக் கிடக்கிறது
இசையூறிய நிலமொன்று
No comments:
Post a Comment