பார்வைகள்

Thursday, May 30, 2013

மழை: மனதுக்குள்ளும்




உன் கருவிழிகளில் குளிர்ந்துகிடக்கிறது 
என் பால்வீதி

மழையின் திவலைகளில் முறுவலிக்கிறது
உன் முகம்

ஈரக்காற்றில் உரத்துக் கேட்கிறது
மாயாவியின் பாடல்

வீணாகிக் கொண்டிருக்கிறது
நனைதல்

வெகுதூரத்திற்கு வெகுதூரம்
மஞ்சள் பூத்துக் கிடக்கிறது
இசையூறிய நிலமொன்று

No comments:

Post a Comment