கொதித்ததும்
குளிர்ந்ததும்
சிலிர்த்ததும்
தகித்ததுமான
நெடும்பயணத்திலிருந்து பாய்ந்தோடி வரும்
மதநீர்ப் பெருக்கிய என்
உன்மத்தங்களின் வாடிவாசல்
விரிய திறந்திருக்கும் உன் கோட்டைக் கதவாயிருந்திருக்கக்கூடும்
திமில் சிலிர்த்து முன்னேறுகையில்
அங்குலங்களில் கரையும் இடைவெளிகளை எதிர்கொள்ள
ஒரு பேரிடர் மேலாண்மையை
துணைக்க்ழைத்து வந்திருப்பேன் கையோடு
முன்னெற்றி முகிழ்த்தலில் துவங்கித் தொடரும் ஒரு
கலாபத்தின் அதீதங்களில் பரிதவித்து மீளும் நேரம்
உருகி வழிந்துகொண்டிருக்கும்
நாட்பட்ட அடர்பசலையின் நிறப்பிரிகையில்
எனக்கான வண்ணங்களைத் தேடிக்கொண்டிருந்திருப்பேன் பட்டாம்பூச்சியாவதற்கு
விடுபடுதலின் விழைதலற்ற
முன்பனிக் காலத்துப் பின்னிரவில்
ஓய்ந்த மழையின் கடைசிச் சாரலாய்
அங்கங்கே விழுந்துகொண்டிருக்கும் உன்
சினேகத்தின் சிதறல்களைச் சேகரித்திருந்திருப்பேன்
சிறுபிள்ளையென
சாத்தியங்கள் இத்தகையனவாயிருந்தும்
அவசர முயக்கத்தின் களைப்பில்
ஆழ்ந்துறங்கும் உன் வெற்று முதுகை
வெறுமனே வெறித்துக்கொண்டேயிருக்கத்தான் வாய்க்கிறது
ஒவ்வொரு இரவிலும்
குளிர்ந்ததும்
சிலிர்த்ததும்
தகித்ததுமான
நெடும்பயணத்திலிருந்து பாய்ந்தோடி வரும்
மதநீர்ப் பெருக்கிய என்
உன்மத்தங்களின் வாடிவாசல்
விரிய திறந்திருக்கும் உன் கோட்டைக் கதவாயிருந்திருக்கக்கூடும்
திமில் சிலிர்த்து முன்னேறுகையில்
அங்குலங்களில் கரையும் இடைவெளிகளை எதிர்கொள்ள
ஒரு பேரிடர் மேலாண்மையை
துணைக்க்ழைத்து வந்திருப்பேன் கையோடு
முன்னெற்றி முகிழ்த்தலில் துவங்கித் தொடரும் ஒரு
கலாபத்தின் அதீதங்களில் பரிதவித்து மீளும் நேரம்
உருகி வழிந்துகொண்டிருக்கும்
நாட்பட்ட அடர்பசலையின் நிறப்பிரிகையில்
எனக்கான வண்ணங்களைத் தேடிக்கொண்டிருந்திருப்பேன் பட்டாம்பூச்சியாவதற்கு
விடுபடுதலின் விழைதலற்ற
முன்பனிக் காலத்துப் பின்னிரவில்
ஓய்ந்த மழையின் கடைசிச் சாரலாய்
அங்கங்கே விழுந்துகொண்டிருக்கும் உன்
சினேகத்தின் சிதறல்களைச் சேகரித்திருந்திருப்பேன்
சிறுபிள்ளையென
சாத்தியங்கள் இத்தகையனவாயிருந்தும்
அவசர முயக்கத்தின் களைப்பில்
ஆழ்ந்துறங்கும் உன் வெற்று முதுகை
வெறுமனே வெறித்துக்கொண்டேயிருக்கத்தான் வாய்க்கிறது
ஒவ்வொரு இரவிலும்
அருமை!பாராட்டுக்கள்---ஆர்.எஸ்.மணி.திண்டுக்கல்
ReplyDeleteஅருமை
ReplyDeleteஒரு ஆண், பெண்ணைப் பார்த்துப் பாடுகிறானா ?
ReplyDeleteirandam murai padikkumbodhum pudhidhagave therigiradhu(mudhal murai 361l)
ReplyDeletenice desig
ReplyDelete"விடுபடுதலின் விழைதலற்ற
ReplyDeleteமுன்பனிக் காலத்துப் பின்னிரவில்
ஓய்ந்த மழையின் கடைசிச் சாரலாய்
அங்கங்கே விழுந்துகொண்டிருக்கும் உன்
சினேகத்தின் சிதறல்களைச் சேகரித்திருந்திருப்பேன்
சிறுபிள்ளையென.."
அருமையான கவிதை .ஆழ்ந்த பொருள் .வாழ்த்துக்கள்
iravugal irulil marayum.
ReplyDelete